3 வது வருடம் நினைவஞ்சலி
அமரர் தங்கரத்தினம் வேலாயுதம்
(ஓய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர், ஊறணி அரச வைத்தியசாலை)
தோற்றம்: 08 ஏப்ரல் 1942 - மறைவு: 23 நவம்பர் 2018
யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி வல்லை வீதி, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கரத்தினம் வேலாயுதம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.மூன்று ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களை மறவாது தவிக்கின்றோம் அம்மா
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தெடுத்து
பிள்ளைகளின் நினைவாக வாழ்ந்து..
வாழ்விலும் தாழ்விலும் துணை நின்ற
என் அருமைத் தாயே
வாழ்வு மாயமென்று எமக்கு
உணர்த்தி விட்டுச் சென்றாயோ அம்மா
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
