முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

திரு வல்லிபுரம் கந்தசாமி

(முன்னாள் அதிபர்- பலாலி ஆசிரியர் கலாசாலை, முன்னாள் யுனெஸ்கோ கணித, விஞ்ஞானக் கல்வி ஆலோசகர்- பூட்டான், முன்னாள் பௌதீகவியல், கணித ஆசிரியர்- சயன்ஸ் சென்ரர், முன்னாள் பகுதி நேர ஆங்கில ஆசிரியர்- கரவெட்டி விக)

வல்லிபுரம் கந்தசாமி

தோற்றம்: 10 மார்ச் 1932 - மறைவு: 01 ஏப்ரல் 2019

திதி: 20.03.2020 

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
 
முதலாம் அண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் அப்பா!
 
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும் துடிக்கின்றோம்
 
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில் என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்

துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
 
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அழியாது
எம் துயரம் மறையாது உங்கள் நினைவு!

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் உங்களுக்கு
பிள்ளையாக பிறக்கும் பேறு பெற வேண்டும்- அப்பா
 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org