அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 18 பெப்ரவரி 2018
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தமது 70 ஆவது வயதில் இன்றைய தினம் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அகில இலங்கை இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.
திருக்கோணேஸ்வரம் திருப்பணி சபையின் தலைவர், இந்து வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்து வந்துள்ளார்.
www.tamilthakaval.org