கலாநிதி. A.T.ஆரியரத்ன

(சர்வோதய நிறுவன ஸ்தாபகர்)

A.T.ஆரியரத்ன

தோற்றம்: 05 நவம்பர் 1931 - மறைவு: 16 ஏப்ரல் 2024

காலி, உணவத்துனவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஏ.டி.ஆரியரத்ன அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழ் உடல் சர்வோதய தலைமையகம், தம்சக் மந்திர, இல-98, ராவதவத்த வீதி, மொரட்டுவ இல் 17-04-2024 புதன்கிழமை மாலை 6.00 மணி முதல் 20-04-2024 சனிக்கிழமை நண்பகல் 12.00 வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி ஊர்வலம் சர்வோதய தலைமையகத்திலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்த்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரச மரியாதைகள் வழங்கப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற்ற பின் மாலை 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2024 00:00)