திரு. செல்லையா திருஞானசம்பந்தன்
தோற்றம்: 06 ஜூலை 1954 - மறைவு: 17 ஏப்ரல் 2024
யாழ்.அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், ஈரான், ஜேர்மனி, Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா திருஞானசம்பந்தன் அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல் - சிரோண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கொக்குவில் பொற்பதி வீதியைச் சேர்ந்த சாந்தலோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,
சேந்தன், கோகுலன், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எழில், கோபிகா, நிதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் கோபலகிருஷ்ணன், வைகுந்தநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகபூசணி, பத்மரூபி, சுரேந்திரன், ரவீந்திரன், ராதலோஜினி, றஜனரூபி, காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் தவமணிதேவி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையும், 22-04-2024 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 11.00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சேந்தன் (மகன்): +1 416 917 2475
கோகுலன் (மகன்):+1 647 677 5765
அம்பிகை (மகள்): +1 416 770 4775
www.tamilthakaval.org