Mr. Kauppaiya Aarumugam
(பசறை வெரலப்பத்தனை, நோர்வூட் வெஞ்சர் தோட்ட தேயிலை தொழிற்சாலை முன்னாள் தலைமை உத்தியோகத்தர்)
Date of Birth: 18 April 1943 - Deceased: 09 April 2024
நாவலப்பிட்டி, கலபொடயைப் பிறப்பிடமாகவும், கண்டி பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பையா ஆறுமுகம் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பையா - காளியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராமநாதன் - அழகம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
யாழினி (பிரித்தானியா), இரமணன் பாலேந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலமுருகன் (பிரித்தானியா), புலோரன்ஸ் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷ்வர்யா, ஆதிக்ஷன், கஜனிஷன், பாருண்யா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 4.00 மணியளவில் பலகொல்ல பொது மயானத்தில் புகழ் உடல் தகனம் செய்யப்பட்டுது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org