திரு. பாக்கியன் ரவீந்திரன்
(முன்னாள் சட்டபூர்வமான மொழிபெயர்ப்பாளர் - நெதர்லாந்து, முன்னாள் ஆங்கில ஆசிரியர் - இலங்கை)
தோற்றம்: 25 டிசம்பர் 1947 - மறைவு: 31 மார்ச் 2024
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாக்கியன் ரவீந்திரன் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான க.அ.பாக்கியன் (முன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி - பட்டிருப்பு, பொத்துவில் வட்டம்), பெரியதம்பி - ஜெயநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு. தர்மசேனா சோலிஸ் (முன்னாள் மட்டு பிரதி மேயர்) - திருமதி தர்மசேனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகேந்தினி (நெதர்லாந்து) அவர்களின் அன்புக்கணவரும்,
பிரணவன் (Head of Customer Service, விஸ்பன் - போர்த்துக்கல்), திருமதி பிரமிளா ரமேஷ் (Lecturer in Englisg - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமேஷ் (Head of Department - ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
தணிகாசலன் (ஓய்வுபெற்ற பொறியியலாளர் - மட்டக்களப்பு), காலஞ்சென்ற Dr. சதானந்தன், திருமதிகள் ரோகிணி - நடராசா (ஸ்கந்தேர்ப், பிரித்தானியா), சறோஜினி - நடேசன் (ஸ்கந்தேர்ப், பிரித்தானியா), சுலோசனி - பஞ்சலிங்கம் (களுவாஞ்சிகுடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இஷான், கதீந் ஆகியோரின் அம்மப்பாவும்,
காலஞ்சென்ற Dr. செல்வரெத்தினம், நாகரெத்தினம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற நடராஜா (ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர்) - குணமணி தம்பதியினரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நெதர்லாந்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பா.தணிகசாலன் +94 77 603 3118
www.tamilthakaval.org