திரு. பரராஜசிங்கம் நவரட்ணராஜா (காந்தி)

(சுருட்டு புகையிலை வர்ததக சங்க முன்னாள் செயலாளர், நிவ் ரஜனி உணவக முன்னாள் உரிமையாளர்)

பரராஜசிங்கம் நவரட்ணராஜா (காந்தி)

தோற்றம்: 29 மே 1953 - மறைவு: 22 மார்ச் 2024

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், இல- 24/1/5, கல்பொத்த வீதி, கொழும்பு -13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரராஜசிங்கம் நவரட்ணராஜா அவர்கள் 22-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவன் - ருக்மணி தம்பதியினரின் மருமகனும்,

மலர்கொடி (மலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

நவரஞ்சி, நவரஜனி,சுஜிதா, பானு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஶ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற அருந்தவமலர், பவளமலர், காலஞ்சென்றவர்களான யோகராஜா, மனோகரராஜா மற்றும் சௌந்தர்ராஜா ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஷ்வரி, விஜயகுமார், பத்மராணி மற்றும் மோகன், மல்லிகா ஆகியோரின் மைத்துனரும்,

பாலராஜன், ஶ்ரீதர்ஷன், அருணாதிலகன், கஜன் ஆகியோரின் மாமனாரும்,

சபரிஷ், சாத்விகா, பவன், யாதவ், விகாசா, ஹித்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 25-03-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2024 00:00)