திருமதி. பூரணம் யோகசேகரம்
மறைவு: 25 மார்ச் 2024
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் யோகசேகரம் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு - கனகம்மா தம்பதியினரின் ஏகபுத்திரியும்,
காலஞ்சென்ற சபாபதி - துரையம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற யோகசேகரம் (ஓய்வு பெற்ற அரச மொழி பெயர்ப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன், சிவகாமி, யாழ்தரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஷ்பராணி, கோகுலேந்திரா, அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிநயா, கபிலன், அபிராமி, ஆதிரை, அகரன், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, சௌந்தரீராணி. தர்மாம்பிகை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-03-2024 புதன்கிழமை அன்று அன்னாரின் இல- 92, கண்டி வீதி, யாழ்ப்பாணம் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org