திருமதி. சுலோசனா கெங்கதாரன்
(ஓய்வுபெற்ற உப அதிபர் - யா/சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயம்)
தோற்றம்: 01 பெப்ரவரி 1963 - மறைவு: 15 ஏப்ரல் 2024
யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுலோசனா கெங்காதரன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - இராசமணி தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் - சிவநேசம் தம்பதியினரின் மருமகளும்,
கெங்காதரன் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - வீதி அபிவிருத்தித் திணைக்களம்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாய்ராவின் (மாணவி-யா.வட்டு மத்திய கல்லூரி) அன்புத் தாயாரும்,
பாலரஞ்சன் (லக்ஸ்மி ஸ்டோர்ஸ்-வட்டுக்கோட்டை) அன்புச் சகோதரியும்,
தங்கராணி (கனடா), காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-04-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, புகழ் உடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
வட்டுதென்மேற்கு,
வட்டுக்கோட்டை.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 844 5558
www.tamilthakaval.org