திரு சுப்பையா ஜெயபாலன் (ஜே.பி)
(முன்னாள் ஓவியர், கேலிச்சித்திர வரைஞர் - வீரகேசரி பத்திரிகை)
தோற்றம்: 08 மே 1946 - மறைவு: 25 மார்ச் 2024
இந்தியா, தமிழ்நாடு பூங்குடியைப் பிறப்பிடமாகவும், கிராண்டபாஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா ஜெயபாலன் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா - மாணிக்கவள்ளி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன் - சந்திராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,
நித்தியகௌரி (ஜேர்மனி), பாலமுருகன், காலஞ்சென்ற பிரேமலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசோதி (ஜேர்மனி), லதா ஆகிியோரின் அன்பு மாமனாரும்,
மதுஷதா, மதுமிதா (ஜேர்மனி), கௌசிக் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் E-1/1, சமகிபுர தொடர்மாடி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று நடைபெற்று, பூதவுடல் பிற்பகல் 2.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக மாதம்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org