திரு. தைலான் கந்தசாமிபிள்ளை (தை.கந்தன்)

(நாவலப்பிட்டி ரஞ்சனாஸ் உரிமையாளர்)

தைலான் கந்தசாமிபிள்ளை (தை.கந்தன்)

தோற்றம்: 26 ஆகஸ்ட் 1938 - மறைவு: 14 ஏப்ரல் 2024

இந்தியா திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தை . கந்தசாமிபிள்ளை அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.35 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தைலான்-அரவாத்தாள் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான தலாத்து ஓயா பகலவத்தை தவசியாபிள்ளை-வேலூரம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

தெய்வாளை அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரன் (ஐக்கிய இராச்சியம்), கிரிஜா, கிரிசாந்தி, ஜெயவாஹினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகராஜா (விக்டோரியா பிளாஸ்டிக்-கண்டி), காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, லோகேஸ்வரன் (அதிபர்-கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலை), திருமதி. சுரம்யா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை (சாரதாஸ்-நாவலப்பிட்டி), காமாட்சி அம்மாள் (கலஹா), காலஞ்சென்றவர்களான அடைக்கப்பிள்ளை (வாசன்ஸ்-நாவலப்பிட்டி), லெட்சுமன்பிள்ளை (ஶ்ரீ சுந்தரம்ஸ்-நாவலப்பிட்டி), மற்றும் பார்வதி (பத்தானம்பட்டி) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை (கலஹா), சிவலிங்கம்பிள்ளை (பத்தானம்பட்டி) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பெரியண்ணன்பிள்ளை, தெவராயபிள்ளை மற்றும் திரு.சடையபிள்ளை, காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை, சோமசுந்தரம் மற்றும் திரு. சிவலிங்கம், திரு. கந்தசாமி ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென்ற காமாட்சியம்மாள், திருமதி. மீனாம்பாள், திருமதி. மகேஸ்வரி, திருமதி. தனலெட்சுமி, திருமதி. மல்லிகா, திருமதி. ரேணுகாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை, தைலான்பிள்ளை மற்றும் சோமசுந்தரம், சுந்தரம், சதாசிவம், நடராஜ் ஆகியோரின் அன்பு சகலையும்,

அனிருத்ரன், கவின், பவன், கௌசிகா, திவிஸ்கர், கவிஸ்ணா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்பிள்ளை - செல்லம்மாள் (விக்டோரியா ஸ்டோர்ஸ்-கண்டி), வைத்திலிங்கம்பிள்ளை - சியாளம்மாள் (கண்டி), எஸ்.டீ. பெரியசாமிபிள்ளை மற்றும் அன்னலெட்சுமி (மஸ்கெலியா), திரு.இராமநாதன் ஜோதி (வத்துகாமம்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் இல-18/3, நான்காம் ஒழுங்கை, சொய்சாகலை வீதியிலுள்ள அவரது இல்லத்தில் 15-04-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் பவ்வாகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

லோகேஸ்வரன் (மருமகன்) +94 77 729 6523 / +94 54 222 2901

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2024 00:00)