திருமதி. அரியரத்தினம் காசிலிங்கம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை - தெல்லிப்பளை மகாஜன கல்லூரி, யூனியன் கல்லூரி)
தோற்றம்: 24 அக்டோபர் 1930 - மறைவு: 24 டிசம்பர் 2024
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், வறுத்தவிளான், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அரியரத்தினம் காசிலிங்கம் அவர்கள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி தங்கராசா-சௌபாக்கியவதி தம்பதியினரின் மருமகளும்,
காசிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், வெற்றிவேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேஷ் (சுவிஸ்), ரமேஸ் (கொழும்பு), ஷகிலா (ஆசிரிய ஆலோசகர்-கொழும்பு) சொரூபா ஆகியோரின் அன்பு தாயாரும்,
சீதா லக்ஷ்மி (சுவிஸ்), சிவகுமாரன் (சிவா மல்டி ஷொப் - தையிட்டி), ராஜ் மோகன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனிற்றா, ஸ்தேவன், ஸ்கோரன் லில்லி, டிலக்ஷன், நிலோஜன், நிசாங்கன் - சாத்விகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-12-2024 வியாழக்கிழமை மதியம் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், 27-12-2024 வெள்ளிக்கிழமை காலை 8:30 - 11:00 மணி வரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
