திரு. தேவராஜப்பிள்ளை பெரியசாமி

(நுவரெலியா Western Textiles - உரிமையாளர்)

தேவராஜப்பிள்ளை பெரியசாமி

தோற்றம்: 02 நவம்பர் 1940 - மறைவு: 27 மே 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜப்பிள்ளை பெரியசாமி அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7:05 மணியளவில் கொழும்பில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜப்பிள்ளை - பச்சையம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான R.K. சிதம்பரம்பிள்ளை - வள்ளியம்மை (தெல்தோட்ட) தம்பதியினரின் மருமகனும்,

சுலோட்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

பாபு, செந்தில்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சவீதாவின் அன்பு மாமனாரும்,

சப்பாணி (திருச்சி), செல்லம்மா ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற கந்தசாமியின் மைத்துனரும்,

சுசீவாவின் (திருச்சி) கொழுந்தனாரும்,

சண்முகநாதன் (சுந்தர் - Iron Steel Company, கொழும்பு) - புஸ்பலதா தம்பதியினரின் சம்பந்தியும்,

பிரிதேஷ், நிகிடா ஆகியோரின் பாட்டாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2025 04:00)