திரு. இளையதம்பி திருநாவுக்கரசு

(ஓய்வு பெற்ற தபாலதிபர், சுன்னாகம்)

இளையதம்பி திருநாவுக்கரசு

தோற்றம்: 25 ஜூலை 1938 - மறைவு: 26 மார்ச் 2026

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி திருநாவுக்கரசு அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-இலட்சுமிப் பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற மங்களநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

யாழினி (யாழ் மாவட்ட செயலகம்), பிரதீபன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையாரும்,

நந்தகுமார் (ஆசிரியர் - யாழ். மானிப்பாய் இந்துக்கல்லூரி), ஜெயதர்சினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தெய்வநாயகி, காலஞ்சென்ற இராசநாயகி, செல்வநாயகி (இலண்டன்), ஜெயந்தன் (கனடா), வாகீசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷிபவன்(Student - University of Sri Jayewardenepura), அகிலேஸ் (Student- Imperial College London), கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2026 00:00)