திருமதி. தங்கம்மா ஏரம்பமூர்த்தி
தோற்றம்: 01 ஜனவரி 1934 - மறைவு: 12 பெப்ரவரி 2022
யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பமூர்த்தி தங்கம்மா அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அ.கி. ஏரம்பமூர்த்தி (சங்கீதபூஷணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணகுமாரி (ஓய்வுநிலை முகாமைத்துவ உதவியாளர்- வலயக்கல்வி அலுவலகம், தென்மராட்சி), இளங்கோ (ஆயுர்வேத வைத்தியர்- சுவிஸ்), கீதவல்லி, புனிதகுமாரி (சங்கீத ஆசிரிய ஆலோசகர்- வலயக்கல்வி அலுவலகம், தென்மராட்சி), விமலகுமாரி (நடன ஆசிரியை- யாழ்/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), இளமுருகன் (Software QA Consultant, UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்லம்மா (கனடா), காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, தாமோதரம்பிள்ளை, நல்லம்மா, கிருஷ்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வித்தியானந்தன், ஜெயலக்ஷ்மி, ஈழநேசன், வனிதா, காலஞ்சென்ற ஸ்ரீரவிகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரதன் (பரதன் ஸ்ரூடியோ, மீசாலை), விசாகன் (தொ.நு உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்களம்), சொரூபினி, ராகவன், வானதி (Head of Cultivation of Medicinal Plants- Swiss), ஆதவன் (சுவிஸ்), சேயோன் (விவசாயத் திணைக்களம், கிளிநொச்சி), வித்தகி (கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்), கிரிபரன் (பொறியியலாளர், சிங்கப்பூர்), ஜனார்த்தனன் (இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், சாவகச்சேரி), ஸ்ரீபிரணவன், அக்சதன், ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று “கந்தகிரி” மீசாலை மேற்கு, மீசாலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
www.tamilthakaval.org
