திரு. ஐயாத்துரை இராமசாமி
(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலயம்)
தோற்றம்: 12 நவம்பர் 1937 - மறைவு: 12 டிசம்பர் 2025
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பழைய பொலிஸ் நிலைய வீதி, சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், அளவோடை வீதி, இணுவில் தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை இராமசாமி அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - தங்கப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட பூத்திரனும்,
கனகசபை - தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
மல்லிகாதேவி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார் (கனடா), சிவகுமார் (அமெரிக்கா), சிவதர்சனி (ஆசிரியை - யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சிவாஜினி (கனடா), தனுஷா (அமெரிக்கா), சுதாகரன் (ஆசிரியர் - யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரிஷா, பிரஜித், சங்கவி, அஸ்வந் ஆகியோரின் பாசமிக்க பேரனும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நவரத்தினம், சந்திரதேவன் மற்றும் இராசராணி, தருமதுரை, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அளவோடை வீதி, இணுவிலில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
