திரு. கனகசிங்கம் மகேந்திரன்
(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் பருத்தித்துறை, வதிரி கனகசிங்க பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவும், வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்பாள் ஆலய போஷகர்)
தோற்றம்: 30 செப்டம்பர் 1929 - மறைவு: 13 மார்ச் 2021
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் மகேந்திரன் அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசிங்கம்(செல்லையா பள்ளிக்கூடம், வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி ஸ்தாபகர், கிராமக்கோட்டு நீதவானும்), பறுபதம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வல்வெட்டியைச் சேர்ந்த பொன்னுத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினபூபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயந்தி (ரோசா), ஜெயக்குமார் (ஜெயம்), ஜெயானந்தன், ஜெயந்திரன் (இந்திரன்- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், பொன்னுத்துரை, ஆறுமுகம், பரமேஸ்வரன், தெய்வேந்திரன் மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மீனாட்சி, கயிலாயநாதன், கதிரவேற்பிள்ளை, சோதிசுந்தரம், சிவபாக்கியம், இராசபூபதி மற்றும் மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தமழவன் (அருள்), சரோஜா, ஜெயந்தினி, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெயநந்தன் (நிசாந்தன்), தனுஷா, ஹரிஷன், கோபிஷன், நிரோஷன், வீணா, தரிணி, சர்மிகா, ரஸ்மிகா, ஜெஸ்மிகா, பிரேமிகா, வீணாஷிரி, சுதன், லிசானி ஆகியோரின் அன்புப் பேரனும்,
கயிலன், கவின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை முன்பதிவு செய்தவர்களுடன் மட்டும் நடைபெறும்.
நேரில் வர இயலாதவர்கள் அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளை நேரலையாக காணலாம். அனைவருக்கும் அனுமதி தர இயலாத நிலையை எண்ணி வருந்துகின்றோம்.
www.tamilthakaval.org
