திரு. கந்தையா சந்திரராசா (சந்திரன்)
தோற்றம்: 03 ஜூன் 1953 - மறைவு: 27 மார்ச் 2025
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சந்திரராசா அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா - தண்டிகைப்பிள்ளை தம்பதியினரின் மூன்றாவது மகனும்,
இராசையா, காலஞ்சென்ற முருகையா, தவபதியம்மா ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது சகோதரனின் (இராசையா) இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் சீயாக்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
