திரு. கந்தசாமிபிள்ளை சொக்கலிங்கம்பிள்ளை
மறைவு: 11 மே 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் பூலாஞ்சேரி கிரமத்தை பூர்வீகமாகவும், நுவரெலியா - மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமிபிள்ளை சொக்கலிங்கம்பிள்ளை அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை - நாகம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை - முத்தம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஷ், கவிதா, காலஞ்சென்ற சச்சிதா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
மகேந்திரன் (டின்சின்), கஸ்தூரி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற வெள்ளாந்துரைபிள்ளை - பச்சையம்மாள், நலமுடன் கனகசிவம் - விஜெயலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,
ராமசாமிபிள்ளை, ஜெகதாம்பாள், காலஞ்சென்ற செல்லம்மாள் ஆகியோரின் சகோதரரும்,
பங்கஜத்தின் கொழுந்தனாரும்,
ஜெகநாதன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை (மணி), ராமச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
அரவாயி (சரோஜா - இந்தியா), காலஞ்சென்ற வள்ளியம்மை, சாரதாம்பாள், பத்மகாந்தி, யோகேஸ்வரி ஆகியோரின் மாமாவும்,
குமார் (கனகேஸ்வரன்), ராகினி (மலர் - இந்தியா), சிவகாந்தன் ஆகியோரின் சித்தப்பாவும்,
ரக்ஷாந், ரக்ஷித்தா, மகேஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
சவிந்ரா, தரணிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-05-2025 புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
