டாக்டர். கந்தையா இரட்னகுமார்
தோற்றம்: 15 ஏப்ரல் 1951 - மறைவு: 26 ஜனவரி 2021
காரைநகர் வாரிவளவை சேர்ந்த விநாசிதம்பி மாஸ்டர் அவர்களின் மருமகன் டாக்டர் இரட்னகுமார் அவர்கள் இன்று 26-01-2021 லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
இவர் யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ரட்ணகுமார் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆசைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி (Retired Consultant Orthopaedic) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ரட்ணேஷ்வரி, முருகரட்ணம், வன்னியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரவேலு, சண்முகதேவி, சூரியகுமாரி, காலஞ்சென்ற செல்வரட்ணம், சாரதாதேவி, காலஞ்சென்ற சாவித்திரிதேவி, சிவமணிதேவி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மதேவி, ராசநாதன், சாரதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
வசந்தி- பத்மநாதன், வசந்தகுமார்- கத்தரின், கல்யாணி- கண்ணன், சிறீஸ்கந்தன் -அக்ணிஷ்கா, காஞ்சனா- செந்தூரன், சுகந்தன், வசந்தன் -வித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
குகாயினி- குறிஞ்சிக்குமரன், தாட்ஷாயினி- தயாரூபன், உஷாயினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
தமயந்தி- சங்கர், குமணன்- ஜெனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
