திருமதி. கோணேசபிள்ளை மகேஸ்வரியம்மா

கோணேசபிள்ளை மகேஸ்வரியம்மா

தோற்றம்: 26 நவம்பர் 1939 - மறைவு: 02 ஜூலை 2026

திருகோணமலை - கட்டைபறிச்சான்- தெற்கு சேனையூரைப் பிறப்பிடமாகவும், கட்டைபறிச்சான்- 04ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கோணேசபிள்ளை மகேஸ்வரியம்மா அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற கோணேசபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஸ்ரீஸ்கந்தா (ஓய்வு நிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளர்), ருத்திரகாந்தன் (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன், உமாதேவி (ஆசிரியை- தி/மூ/சேனையூர் மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்துமதி (ஓய்வுநிலை இலிகிதர்), சிவனேஸ்வரி (ஆசிரியை- தி/மாதுமையம்பாள் வித்தியாலயம் திருகோணமலை) ஆகியோரின் மாமியாரும்,

தனோஜன் (இலத்திரனியல் மென்பொருள் பொறியியலாளர்), ரேணுகாந் (பொறியியல் பீடம்- கிளிநொச்சி), ஜதுசனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 05.00 மணியளவில் திருவுடல் கட்டைபறிச்சான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/07/2026 00:00)