திரு மார்க்கண்டு பாஸ்கரன்

மார்க்கண்டு பாஸ்கரன்

தோற்றம்: 13 ஏப்ரல் 1973 - மறைவு: 17 டிசம்பர் 2023

கிளிநொச்சி பூநகரி செட்டியார் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம், ஜேர்மனி Singen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பாஸ்கரன் அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா வைரவபுளியங்குளத்தில் காலமானார்.

அன்னார், மார்க்கண்டு, காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற யோகநாதன், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருணரூபினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஹபிலினி, திவிகன், யபினுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபன், காலஞ்சென்ற ஜனனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருணரூபன், றஜனி, அருணதீபன், அருள்ராஜ், அமல்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல-1/5, புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிற்பகல் 1.00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2023 05:00)