திரு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை குமாரசுவாமி
(முன்னாள் வாழைசேனை கடதாசி கூட்டு நிறுவன கணக்காளர்- முன்னாள் ஸ்டார்லைன் கூட்டு நிறுவன முகாமையாளர்)
தோற்றம்: 31 மே 1938 - மறைவு: 24 செப்டம்பர் 2021
யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை குமாரசுவாமி அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுன்னாகத்தைச் சேர்ந்த திரு. திருமதி அ. குமாரசுவாமிப் புலவர் தம்பதிகள், காலஞ்சென்ற திரு. திருமதி தி. குமாரசுவாமி (வழக்கறிஞர், J.P.U.P.M, நிறுவனர் மயிலணி சைவ மகா வித்தியாலயம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான முத்துகுமாரசுவாமிப்பிள்ளை (BA- முன்னாள் கல்லூரி அதிபர்) கமலாம்பிகை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் (முன்னாள் ஆயுர்வேதக் கல்லூரி அதிபர்) தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆசைக் கணவரும்,
யமுனா, ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருலிங்கம், பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி (முன்னாள் அதிபர் யாழ் இராமநாதன் கல்லூரி), சிவசோதி (முன்னாள் ஆசிரியை யாழ் இராமநாதன் கல்லூரி), சந்திரசேகரன் (சட்டமாதிபர் திணைக்களம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
www.tamilthakaval.org
