திரு. நாகலிங்கம் பரமசிவம்
(அல்லாரை தான்தோன்றி தாழையடி கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்தாவும்,சமாதான நீதவான் மற்றும் மட்டுவில்,சரசாலை,மீசாலை ஆகிய வற்றில் கிராம உத்தியோகத்தர்)
தோற்றம்: 05 ஜூலை 1948 - மறைவு: 22 மே 2023
யாழ் மீசாலை கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் , மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் அல்லாரை தான்தோன்றி தாழையடி கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்தாவும், சமாதான நீதவான் மற்றும் மட்டுவில், சரசாலை, மீசாலை ஆகியவற்றில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற நாகலிங்கம் பரமசிவம் அவர்கள் நேற்று 22-05-2023ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட மகனும்,
காலஞ்சென்றவர்களான பரமகுரு செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
நவநீதவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவசுதன் (ஆசிரியர், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி), சிவாஜினி (ஆசிரியை, கொழும்பு சென் தோமஸ் கல்லூரி), சிவநந்தினி (லண்டன்), சிவநிரூபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேனகா (இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடு திணைக்களம் கொழும்பு), வதனதாசன் (சம்பத் வங்கி), விஜயரூபன் (லண்டன்), ஹர்ணிகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
