திரு. நல்லதம்பி பாலசுப்பிரமணியம்

(Liberty Hardware - Koslanda)

நல்லதம்பி பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 22 பெப்ரவரி 1958 - மறைவு: 13 அக்டோபர் 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி கிராமம், எதுமலுடையான் கோத்திரம், இரத்தினபுர - கொஸ்லந்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நல்லதம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஹல்துமுல்லை சிதம்பரம்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

துளசிவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுல், லஷாணி, டினுபாரத் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சுசீலா, காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை, சரஸ்வதி, தனம், பத்மினி ஆகியோரின் சகோதரரும்,

சண்முகநாதன் (ஹல்துமுல்லை)  மாப்பிள்ளையும்,

கிருஷ்ணவேணி (நில்லம்பை - கலஹா) மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மகாலிங்கம் (அம்பிட்டிய), பத்மநாதன் (கொழும்பு), இராமசாமிபிள்ளை (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகவிஜயன் (நில்லம்பை - கலஹா) அவர்களின் சகலையும்,

மகாலட்சுமி (கல்கிசை) அவர்களின் கொழுந்தனரும் ஆவார்.

அன்னார் இறுதி நிகழ்வுகள் கொஸ்லந்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15-10-2025 புதன்கிழமை அன்று மதியம் 1.45 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஹல்துமுல்லை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2025 00:00)