திரு. இராஜகோபால் ரெட்டியார் கிருஷாந்த்
தோற்றம்: 23 ஜூன் 1989 - மறைவு: 07 மார்ச் 2026
கொழும்பினை சேர்ந்த திரு. இராஜகோபால் ரெட்டியார் கிருஷாந்த் அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜகோபால் ரெட்டியார் - முத்துலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த திரு. திருமதி. கிருஷ்ணசாமி ரெட்டியார் தம்பதியினரின் மருமகனும்,
வினுப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவ்வின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2026 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 - 3.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
