திருமதி. சரஸ்வதி மகேஸ்வரன்

சரஸ்வதி மகேஸ்வரன்

தோற்றம்: 06 ஜூன் 1956 - மறைவு: 02 டிசம்பர் 2021

யாழ். புங்குடுத்தீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி மகேஸ்வரன் அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கபில்தேவன், அருண் பிரகாஷ், வினோத்காந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பார்கவி அவர்களின் அன்பு மாமியாரும்,

மகேந்திரராஜா தாட்சாயினி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

பரமேஸ்வரன், மகேஸ்வரிதேவி, மேனகராணி, பஞ்சலிங்கம், மகாலிங்கசிவம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரஞ்சினி, மனோகரன், அருள்ராசா, கிருபாகரன், வையந்தி மாலா, சிவதாசன், மதிரூபன், சிவராமலிங்கம் ஞானவதி, சிவமதி, மஞ்சுளாதேவி சண்முகலிங்கம், வசந்தமலர்ச்செல்வி, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேஸ்வரி, யோகநாதன், கோபாலசிங்கம், ரஞ்சி, நகுலேஸ்வரி, மல்லிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-12-2021 சனிக்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து பொது மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-
 
10/7, St. Marys Road,
கல்கிசை.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
 
 





www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2021 05:48)