திருமதி. சத்தியபாமா ஸ்ரீரஞ்சன்
தோற்றம்: 27 ஜனவரி 1972 - மறைவு: 16 மே 2025
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு -15, முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியபாமா ஸ்ரீரஞ்சன் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று வைகுண்ட பிராப்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் - நிர்மலாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - சொர்ணம் தம்பதியினரின் மருமகளும்,
ஸ்ரீரஞ்சன் (பிரிலியண்ட் பிரின்டர்ஸ்) அவர்களின் ஆசை மனைவியும்,
ஸ்ரீ கிருஷோத்தன், ஸ்ரீ விசாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்திகன், யோகிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாரஞ்சனி, ஜெயரஞ்சனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
