திரு. செல்லத்துரை தணிகாசலம் (தவம்)
தோற்றம்: 25 பெப்ரவரி 1951 - மறைவு: 08 ஜூலை 2021
யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தணிகாசலம் அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கு.சி செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கொழும்பைச் சேர்ந்த காலஞ்சென்ற ராஜசேகரம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கல்பனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகீதன், அகலியா, இந்துஜா, அனோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திராவதி, இந்திராவதி, தனேஸ்வரன், ஜெகதீஸ்வரன், தெய்வேந்திரன், ஞானேந்திரன், ரவீந்திரன், குலேந்திரன், வனஜா, உதயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், காலஞ்சென்ற விக்கினேஸ்வரராஜா, கீதா, தெய்வகலா, கலைவாணி, கௌசல்யா, சாந்தி, சுதாமதி, குகனேசன், மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற விஜயசேகரம், ஜீவராணி, காலஞ்சென்றவர்களான ரவிச்சந்திரன், சித்திரானந்தன் மற்றும் உதயநாத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசையா, உதயசந்திரிகா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலை 2வது மாடியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அரச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அன்னாரின் இறுதிக்கிரியை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
