திருமதி. செல்வராசா சரஸ்வதி
(முன்னாள் கணக்காளர்- வவுனியா வடக்கு ப.நோ.கூ. சங்கம்)
மறைவு: 03 அக்டோபர் 2025
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நைனாமடு நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா சரஸ்வதி அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா - முத்துக்குட்டி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்புராஜா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
செல்வராசா (ஈசன் - ஓய்வுபெற்ற உப தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன், பரராசசிங்கம், கமலாம்பிகை, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஈஸ்வரி, தனராஜா, தவராஜா, செந்தாமரை, செல்வி, தயாபரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் நைனாமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
