திரு. தம்பிஐயா குமாரசாமி
(ஓய்வுபெற்ற அதிபர்)
தோற்றம்: 07 மே 1936 - மறைவு: 10 ஏப்ரல் 2024
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கச்சாய் வீதி கொடிகாமம் மற்றும் மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிஐயா குமாரசாமி அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
கதிரேசு - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
அன்னப்பிள்ளை (அன்னலட்சுமி - ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஞானபூபதி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதனின் மைத்துனரும்,
சுதர்சன் (பிரித்தானியா), சுதர்சினி (பிரான்ஸ்), சுகுந்தன் (பிரித்தானியா), சுபாஜினி (ஆசிரியை - யா/கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயவதனி (பிரித்தானியா), பேரின்பநாயகம் (பிரான்ஸ்), கமலினி (பிரித்தானியா), இரமேஸ் (ஆசிரியர்- யா/மிருசுவில் R.C.T.M.S) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
ஹனுராம், பிராமி, ஆரணி, ஆசிகன், யதுர்ஷன், சபிஷன், கனுஷன், திலக்ஷன், திஷானன், திதுஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மீசாலை கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று புகழ் உடல் தகனக்கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிபிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org