திரு தம்பிமுத்து குகதாசன்
(ஓய்வுநிலை தபால் அதிபர்)
தோற்றம்: 07 பெப்ரவரி 1951 - மறைவு: 03 ஏப்ரல் 2024
யாழ். அச்சுவேலி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், தொல்புரம்மேற்கு சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு . தம்பிமுத்து குகதாசன் அவர்கள் இன்று 03-04-2024ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்தது - செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஓய்வு பெற்ற ஆசிரியை விஜிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கணேசன் மற்றும் மகேஸ்வரி (கனடா), துரைராஜா (கனடா), யோகநாதன் (அச்சுவேலி), நவரத்தினராஜா (பிரான்ஸ்), ஜெயபாலன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
குகபிரசாத் (கனடா), குகபிரியா (கனடா), காலஞ்சென்ற பிரியந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ஜனித்தா (கனடா), சுரேஸ்குமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுஷி, விதுண், ஜனுஸ் (கனடா) பாசமிகு பேரனும் ஆவார்.
www.tamilthakaval.org