திருமதி. தங்கேஸ்வரி அருளானந்தம்
தோற்றம்: 10 ஆகஸ்ட் 1940 - மறைவு: 18 ஜனவரி 2026
யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை - குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி (ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்), ஶ்ரீதரன் (கனடா), சுகந்தினி (நோர்வே), காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் தாயாரும்,
செவ்வேள் (ஓய்வுபெற்ற நகர சபை செயலாளர், கட்டைவேலி - நெல்லியடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர்), ரஜிதா (கனடா), காலஞ்சென்ற ரமணன் ஆகியோரின் மாமியாரும்,
ஆரூர் (கனடா), சுகனவேள், சசிபன் (மருத்துவபீடம், கொழும்பு) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று கொடிகாமம் வீதி அந்தோனியால் கோயிலடி நெல்லியடியிலுள்ள அன்னாரது இல்ல்த்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
