திரு. தியாகராசா மார்க்கண்டு (முத்து)
(ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்)
மறைவு: 08 செப்டம்பர் 2021
யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா வேலூர், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா மார்க்கண்டு அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா (டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நீலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவாஜினி (ஜேர்மனி), கோவர்த்னி (கனடா), செந்தூரன் (இலங்கை), கோபிதன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிகாந்தா, பரணீதரன், லதா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஜெரூசன், ஜெனிசன், ஜெசிக்கா, இயலினி, சீரோன், கயல், தீட்சிதன் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2021 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
